காக்கைக்கா காகூகை
கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா
பாட்டின் விளக்கம்
காக்கைக்கு ஆகா கூகை - காகத்திற்கு கூகையை வெல்ல முடியாது.
கூகைக்கு ஆகா காக்கை - கூகைக்குக் காகத்தை வெல்ல முடியாது.
கோக்கு கூ காக்கைக்கு - அரசன் தன்நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பதற்கு
கொக்கொக்க- கொக்கைப் போல, கைக்கைக்கு
காக்கைக்கு - பகையை எதிர்த்து நாட்டைக் காப்பதற்
கைக்கு ஐக்கு ஆகா - சிறந்த அரசனாலும் முடியாமல் போய்விடும்.
பதிவுரை: காகத்தினால் கூகையை இரவில் வெல்ல முடியாது. ஏனென்றால் காகத்திற்கு இரவில் கண் தெரியாது. கூகையால் காகத்தைப் பகலில் வெல்ல முடியாது ஏனென்றால் கூகைக்குப் பகலில் கண் தெரியாது. அதே போல, ஓர் அரசன் தன் நாட்டைப் பகைவரிடமிருந்து காக்கவேண்டுமென்றால் ஓடுமீன் ஓடி உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கைப் போல காத்திருக்க வேண்டும். சாதகமான சமயம் வரும்வரை பொறுத்திருக்க வேண்டும். இல்லையென்றால், பலம்பொருந்திய அரசனாலும் பகையை எதிர்த்துத் தன் நாட்டைக் காக்க முடியாமல் போய்விடும்.