Tuesday, 29 December 2020
தேக் பகதூர் சிங்
Monday, 17 August 2020
முன்னோடிகள்
காந்தி கூறிய மருத்துவம் தர்மம்
ஒவ்வொரு வீடும் ஒளிமயமாகிட
சாணக்கியர் கூறியது
சுவாமி விவேகானந்தர் கூறியது
ஹிதோபதேசம்
पात्रत्वाध्दनमाप्नोति धनाध्दर्मं ततः सुखम् ।।
வித்யா ததாதி வினயம்
வினயாத் யாதி பாத்ரதாம் |
பாத்ரத்வாத் தனமாத்னோதி
தனாத் தர்மம் தத: ஸுகம் ||
பொருள்:
திருக்குறள்
Thursday, 30 July 2020
கோபம்
திருக்குறள் அறத்துப்பால்
Wednesday, 29 July 2020
மண் தந்த உறவுகள்
Saturday, 25 July 2020
தியான் சந்த் சிங்
விளையும் பயிர்
தவ வலிமை
மகாகவி பாரதியார்
மார்பி லேஒடுங்கினாய் போ போ போ
பொலிவி லாமுகத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
சுவாமி விவேகானந்தர் ௯றியது
சுவாமி விவேகானந்தர் ௯றியது
தீரன் சின்னமலை
ஆதிசங்கரர் காட்டிய தீரம்
வீரத்துக்கு விருது
மனிதா நீ மகத்தானவன்
பாரதத்தாய் இளையமகன்
பண்பாட்டில் மூத்த மகன்
வரலாற்றை உருவாக்கும் தலைமகன் நீ
(மனிதா நீ)
மனம் வைத்தால் மலைகளும் உன்
கைகளுக்குள் தூளாகும்
கணப் பொழுதில் நதிகளுமே
திசைமாறிப் பாய்ந்து வரும்
மனம் வைத்தால் மண்ணிதனில்
அம்ரு தமும் திரண்டுவரும்
வானமிங்கு பூமி யுடன்
விளையாட்டாய் ஒன்றிணையும்
அழிவற்றவன் நீ....அழிவற்றவன் நீ
உந்தன் உயிரினிலே நின்றுலவும்
பரம்பொருளின் மகத்துவத்தை உணர்ந்திடுவாயே
(மனிதா நீ)
கண்களிலே கனலிருக்கும்
அசைவினிலே புயலிருக்கும்
பொங்கிவரும் சினங் கண்டு
காலனிங்கு ஓடிவிடும்
மண்ணும் செந் நிறமாகும்
மாமலையும் தாழ்ந்துவிடும்
சீற்றத்தின் உச்சியிலே
தாண்டவம் நடம் புரியும்
உண்மையிலே நீ...உண்மையிலே நீ
பெரும் சக்திகளின் முழுஉரு நீ
குரல் கொடுத்து புதுயுகத்தை அழைத்திடுவாயே
(மனிதா நீ)
அண்டத்தில் வீரமகன்
அக்னியைப் போல் பெருந்தீரன்
கட்டளைக்கு அடிபணிந்து
காலம்கூட நின்று விடும்
உறுதி கொண்டு உழைத்தாலே
சாதிப்பாய் எதையும் நீ
துணிவு கொண்ட உள்ளத்துடன்
சிங்கமென எழுவாய் நீ
முயன்றாலே நீ...முயன்றாலே நீ
உந்தன் முயற்சியெனும் பெரும் பலத்தால்
மண்ணுலகை விண்ணுலகாய் மாற்றிடுவாயே
(மனிதா நீ
சுவாமி விவேகானந்தர் ௯றியது
சுவாமி விவேகானந்தர் ௯றியது
சித்தர் பாடல்
குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.
பொருள்:-
உடல் என்பது, எலும்புகளைத் தூண்போல நாட்டி வைத்து, அவற்றின் இருப்பிடம் மாறி விடாமல் இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, அவற்றுக்கு இடையில் தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, தோலால் மூடி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை அடக்கி உடல் என்ற உருவம் உண்டாக்கப்பட்டிருக்கிறதாம்
Thursday, 23 July 2020
திருக்குறள்
Tuesday, 21 July 2020
திருக்குறள்
திருக்குறள்
Sunday, 19 July 2020
புதிய கோணங்கள்
கோபுர தரிசனம்
அர்ஜூனா Vs பிங்கலை
Friday, 15 May 2020
திருக்குறள்
Wednesday, 13 May 2020
நான்காம் திருமுறை
Tuesday, 12 May 2020
சிறந்த தண்டனை மன்னிப்பாகும்
Monday, 16 March 2020
உள்ளங்கையில்_வைகுண்டம்
தன்னையே நம்புபவன் உத்தமன்
நான் சாதாரண ஸ்வயம்சேவக்
பரம தயாளனான பாண்டுரங்கன்
Sunday, 15 March 2020
ராமாயணத்திலும் குசேலன்
Tuesday, 21 January 2020
கெடுத்தது எது?
கடவுள் எங்கே ?
அன்னக் குஞ்சுகளும் திருதராஷ்டிரனும்
குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.
கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்...
நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையா சமைப்பது, அவரை பிரித்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.
அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்துகொடுத்து பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார். அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.
திருதராஷ்டிரா இப்போது சொல் என்றார் கிருஷ்ணன்..
அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.
வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டார். ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார், அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே!
சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரன்.
புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது மன்னன் செய்ததே தவறு எனக் கூறினாய்.
அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.
ஆனால், நான்சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.
அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய். ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.
தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார்.
தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.
நன்றி தினமணி.