‘உண்மை, நன்னடத்தை, நல்லெண்ணம் ஆகியவற்றை மையமாக வைத்து நான் ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவ தீர்மானித்திருக்கிறேன். அதற்கான இடத்தையும் தேர்ந்தெடுத்து வைத்துள்ளேன்’ என்று யூனானை சேர்ந்த வயதான தத்துவஞானி ஒருவர் தன் நண்பனிடம் கூறினார்.
அதற்கு அவர் நண்பர், 'அப்படியானால் ஆடுகளை வாங்கி அதை உங்கள் மாணவர்களாக்கி, அதற்கு இந்த பாடங்களை எல்லாம் சொல்லிக் கொடுங்கள்’ என்று கேலியாகக் கூறினார்.
தத்துவஞானி அதைப் பொருட்படுத்தாமல், பள்ளிக்கூடத்தை நிறுவினார். இரண்டு மாணவர்கள் மட்டுமே அப்பள்ளியில் சேர்ந்தனர். அந்த பள்ளியை பற்றி அறிந்த சிலர், தத்துவஞானியை பித்தன் என நினைத்தனர்.
இதைப் போன்ற கூரிய அம்புகள் அவரை தன் பாதையிலிருந்து சற்றும் விலக்கவில்லை. காலம் கடந்தது.
அவ்விரு மாணவர்களின் படிப்பும் முடிந்தது. படிப்பில், அறிவில், நன்னடத்தையில் மிகச் சிறந்தவர்களாக அவர்கள் விளங்கினர். சத்யமும் விவேகமும் கொண்டு திகழ்ந்தனர்.
அவர்கள் சொல்வதும் செய்வதும் ஒன்றாகவே இருந்தன. இதைக் கண்ட மக்கள், தத்துவ ஞானியின் முன்னால் தலை வணங்கினர். பள்ளிக்கூடம் வளர்ந்தது. பல்கலைக் கழகமாக மாறியது.
இரண்டு மாணவர்களில் ஒருவன் யூனானின் சேனானியாகவும், மற்றொருவன் செயலாளராகவும் இருந்தார்கள்.
இப்படி ஒரு அருமையான பள்ளிக் கூடத்தை நிறுவியவர் யார் தெரியுமா? அவரின் பெயராலேயே ஜூனோ பல்கலைக்கழகம், உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக இன்று விளங்கிக் கொண்டிருக்கிறது