Friday, 3 September 2021

சுவாமி சிரத்தானந்தர்

சுவாமி சிரத்தானந்தர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். மாப்ளா கலவரத்தில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்களைக் கட்டாயப் படுத்தி முஸ்லிம்களாக மதம் மாற்றியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மதம் மாறியவர்களை மீண்டும் ஹிந்து சமுதாயத்திற்குள் கொண்டுவருவதற்காக 'சுத்தி' இயக்கத்தை தொடங்கினார்.
இவரது தீவிரமான முயற்சியின் காரணமாக உத்திர பிரதேசதில் 18000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தாய்மதம் திரும்பினர்.

இதனைக்கண்டு பொறுக்காத காந்திஜி இவரை காங்கிரசை விட்டே நீக்கினார். 26.12.26 அன்று அப்துல் ரஷீத் என்பவனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ரஷீதை போலிஸ் கைது செய்தது.
ரஷீத் நமது சகோதரன் என்று காங்கிரஸ் மானாட்டிலே நிதி திரட்டினார் காந்திஜி.

பகத் சிங்கின் தூக்கு தண்டனையை ஆயுல் தண்டனையாக மாற்ற கடிதம் எழுதுமாறு கேட்டபொழுது அதனை மறுத்துவிட்டார். வன்முறையில் ஈடுபட்ட பகத்சிங், அதற்கான தண்டனயை அனுபவிக்க வேண்டும் என்றார்.

காந்திஜியின் பரந்த மனப்பான்மையை என்னவென்று சொல்வது.

Wednesday, 11 August 2021

கிட்டூர் சென்னம்மா

கர்நாடகத்தில் பெல்காம் அருகே உள்ள ககதி கிராமத்தில் (1778)ல் பிறந்து கிட்டூர் அரசர் முல்லசர்ஜாவை மணந்து 
போர் கலைகள் பயின்று ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கடும் போரிட்டு பிரிட்டிஷாரால் சிறை பிடிக்கப்பட்டு சிறையிலேயே உயிரிழந்தவர் வீரத்தியாகி கிட்டூர் சென்னம்மா.

சென்னம்மா என்றால் அழகிய பெண் என்று அர்த்தம். ராஜ குடும்பத்தினர்போல சகல வசதிகளுடன் வளர்ந்தார். சமஸ்கிருதம், கன்னடம், மராட்டி, உருது மொழிகளைக் கற்றார்.
சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில்வித்தையில் தேர்ச்சி பெற்றார். துணிச்சலான வீராங்கனை என்று பெயர் பெற்றார்.

 15 வயதில் கிட்டூர் அரசர் முல்லசர்ஜாவுடன் திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் பிறந்தான்.
சென்னம்மாவின் திருமண வாழ்க்கை வெகுகாலம் நீடிக்கவில்லை. 1816-ல் கணவரும் 1824-ல் ஒரே மகனும் இறந்தனர். குழந்தை இறந்தவுடன், சிவலிங்கப்பா என்ற உறவுக்கார குழந்தையைத் தத்தெடுத்து அவனுக்கு முடிசூட்டினார் சென்னம்மா.

மிகவும் செழிப்பாக இருந்த கிட்டூர் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றும் எண்ணத்தில் ஏற்கெனவே இருந்தது ஆங்கில அரசு.
 வாரிசு இல்லாத ராஜ்ஜியம் என்று கூறி கிட்டூரை அபகரிக்கும் எண்ணத்திலும் இருந்தது.

 எனவே, இந்த சூழலை நல்ல வாய்ப்பு எனக்கருதி சென்னம்மாவின் தத்துப்பிள்ளை சிவலிங்கப்பாவை நாடு கடத்த உத்தரவிட்டது அன்னிய ஆங்கிலேய அரசு. ஆங்கிலேயர்களின் வரி வசூல் விஷயத்தில் அதிருப்தியாக இருந்த ராணி சென்னம்மா இந்த உத்தரவை மதிக்காமல் உதாசீனப்படுத்தினார்.

அதையே காரணமாக வைத்து ஆங்கிலேயர்கள் பெரும் படையுடன் வந்து கிட்டூர் ராஜ்ஜியத்தை முற்றுகையிட்டனர். மிகப்பெரிய பெரிய போர் மூண்டது. மிகவும் துணிச்சலுடனும் தீரத்துடனும் ராணி சென்னம்மா போரிட்டார். ஆங்கிலேயப் படையில் உயிர்ச்சேதம் அதிக அளவில் ஏற்பட்டது. 2 முக்கிய அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.

சென்னம்மாவை நேராக வெல்ல முடியாததால் ஆங்கிலேயப் படைத் தளபதி சாப்ளின், வஞ்சகமாக ராணியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டு தன் அதிகாரிகளை மீட்டுச் சென்றான். 

ஆனால், நயவஞ்சகத்துடன் மேலும் அதிகமான படையுடன் திரும்பவும் வந்து கிட்டூரை மீண்டும் தாக்கினான். இந்த போர் 12 நாட்கள் நீடித்தது.

நவீன போர்க் கருவிகள், அதிக வீரர்கள் என்று அதிக வலிமையுடன் இருந்த ஆங்கிலேயப் படையை எதிர்த்து ராணி சென்னம்மாவின் வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனாலும், முயற்சியை விடாமல் தீரமாக தொடர்ந்து போராடிய சென்னம்மா சிறைபிடிக்கப்பட்டார். பைல்ஹோங்கல் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார்.

ராணியிடம் மிகுந்த விசுவாசம் கொண்ட தளபதி சங்கொலி ராயண்ணா, அவரை விடுவிக்க தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆங்கிலேயருக்கு எதிராக கொரில்லா முறையில் தொடர் தாக்குதல்கள் நடத்தினார். ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை. அவர் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.

 புனித நூல்களைப் படித்தும், பூஜைகளில் ஈடுபட்டும் ராணி தனது சிறை வாழ்வைக் கழித்தார். 51-வது வயதில் சிறையிலேயே (1829) காலமானார். விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட முன்னணி வீராங்கனையாகவும், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வீரச் சின்னமாகவும் இன்றளவும் சென்னம்மா கொண்டாடப்படுகிறார்.
#ஜெய்ஹிந்த் #வந்தேமாதரம்

Wednesday, 14 July 2021

தவம்

 

அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி
மனத்துளே பேதாபேதம்
வஞ்சனை, பொய், களவு சூது
சினத்தையும் தவிப்பாயாகில்
செய்தவம் வேறுண்டோ?
   ----- வள்ளலார்

அறிவிலே தெளிவு

 

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனி அரசாணை
பொழுதெல்லாம் நினது பேரருளின் 
நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் 
நிலைத்திடல் என்றிவை அருளாய்
குறி குணம் ஏதும் இல்லாதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே
  ---- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

அறம்

 

அறனறிந்து மூத்த அறிவுகையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
      --திருக்குறள்
 பொருள்: 
அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் 
உள்ள அறிவுடையவரின் நட்பைக் கொள்ளும் வகை 
அறிந்து ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்

ஆசை

 

அவா இல்லார்க்கு இல்லாகும்துன்பம் அஃதுஉண்டேல்
தவா அதுமேன் மேலும் வரும்
                          திருக்குறள் (368) 
பொருள்:
 ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் இல்லை. 
ஆசை உண்டானால் எல்லாத் துன்பங்களும் 
 முடிவில்லாமல் இடைவிடாமல் வரும்.

Tuesday, 13 July 2021

தெய்வம்

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே
  --- நம்மாழ்வார் திருவாய்மொழி
 பொருள்:
 அவரவர் தமது தமது அறிவுகளுக்குத் தோன்றிய 
வகைப்படியே அந்தந்த தெய்வ வடிவங்களை 
இறையவர் என அடிபணிவார்கள்; அவரவர் 
தெய்வங்கள் குறையுடையவரே அல்லர்; 
ஓர் இறைவரே அவரவருடைய விதிப்படியே 
அடையும் படி நின்று அருள் புரிகிறார்

 


Saturday, 3 July 2021

பூமியில் பிறந்த

 

ஏதத்தேஷ ப்ரசூதஸ்ய சகாஷாதக்ரஜன்மனா
ஸ்வம் ஸ்வம் சரித்ரம் சிக்ஷேரன் ப்ருதிவ்யாம் சர்வமானவா:

பூமியில் பிறந்த எல்லா மக்களும் இந்த நாட்டின் ரிஷிகளும், முனிகளுமான முன்னோர்களின் வரலாற்றிலிருந்து  தத்தமது பாதையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்

ஹிந்துஸ்தான்

 

ஹிமாலயம் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம்
தம் தேவநிர்மிதம் தேஷம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே

இமயம் முதல் குமரி வரை கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த நாடு ஹிந்துஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.


Friday, 2 July 2021

பாவம் புண்ணியம்

 

அஷ்டாதஷ புராணானாம் ஸாரம் வ்யாஸேன கீர்த்திதம்
பரோபகார: புண்யாய பாபாய பரபீடனம்  

பதினெட்டுப் புராணங்களிலும் வியாஸர் சொல்லும் சாரம் இதுதான்; பிறர்க்கு உதவுவது புண்ணியம். பிறரைத் துன்புறுத்துதல் பாவம். 

நலிந்தோரை

 

அஷ்வம் நைவ கஜம் நைவ வ்யாக்ரம் நைவ ச நைவ ச
அஜாபுத்ரம் பலிம் ததாத் தேவோ துர்பலகாதக: 

குதிரையோ, யானையோ, புலியோ அல்ல;  அல்லவே அல்ல; ஆட்டுக்குட்டியே வேள்வியில் பலியிடப்படுகிறது; நலிந்தோரைக் கடவுளும் காப்பதில்லை.

பலம்

 

துர்பலஸ்ய பலம் ராஜா பாலானாம் ரேதனம் பலம்
பலம் மூர்க்கஸ்ய மௌனித்வம் சௌராணாம் அந்ருதம் பலம்

அரசன் நலிந்தோரின் பலம்; அழுகை குழந்தையின் பலம்; 
மௌனம் மூர்க்கனின் பலம்; பொய்யுரைப்பது கள்வனின் பலம்.

கல்வி

 

வித்யா விவாதாய தனம் மதாய ஷக்தி: பரேஷாம் பரிபீடனாய
கலஸ்ய: ஸாதோ: விபரீதம் ஏதத் க்ஞானாய தானாய ச ரக்ஷணாய   

துர்மதி படைத்தவனின் கல்வி விவாதங்களுக்கும், செல்வம் அகந்தைக்கும், சக்தி பிறரைத் துன்புறுத்தவுமே பயன்படுகிறது. நன்மதி படைத்தவனுக்கோ அவன் கல்வி நல்வழிப்படுத்தவும், செல்வம் கொடைக்கும், சக்தி நலிந்தவரைக் காக்கவும் பயன்படுகிறது.

சக்தி அற்றோருக்கு நட்பில்லை

 

வனானி தஹாதோ வன்ஹே ஸகா பவதி மாருத:
ஸ ஏவ தீப நாஷாய க்ருஷே கஸ்யாஸ்த்தி சஹ்ருதம்

வனத்தில் தீப்பற்றினால் பரவ உதவும் காற்று அகலின் சுடரை அவிக்கிறது. சக்தி அற்றோருக்கு நட்பில்லை.

சிங்கத்திற்குப் பட்டாபிஷேகம்

 

ந அபிஷேகோ ந சம்ஸ்கார: ஸிம்ஹஸ்ய க்ரியதே வனே
விக்ரமார்ஜிதஸ்த்வஸ்ய ஸ்வயமேவ ம்ருகேந்ரதா

வன ராஜ்யத்தில் சிங்கத்திற்குப் பட்டாபிஷேகம் நடப்பதில்லை; தன் சுய பராக்கிரமத்தாலேயே அது ராஜாவாகிறது.

நீர், அன்னம், சுபாஷிதம்.

 

ப்ருத்வீவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலம் அன்னம் சுபாஷிதம்.
மூடை: பாஷாணகண்டேஷு ரத்னசங்யா பர்தீயதே  

பூமியின் மூன்று  ரத்தினங்கள் நீர், அன்னம், சுபாஷிதம். முட்டாள்களோ கற்களை ரத்தினம் என்பார்கள்.

நெருப்பு, கடன், பகை

 

அக்னி: சேஷம் க்ருணா: சேஷம் ஷத்ரு: சேஷம் ததைவ ச
புன: புன: ப்ரவர்த்தேத தஸ்மாத் சேஷம் ந கார்யேத்

நெருப்பு, கடன், பகை இம்மூன்றும் சிறிது எஞ்சினாலும் மீண்டும் வளரும். ஆகவே முற்றிலுமாய்த் தீர்க்கப்பட வேண்டும்.

Friday, 18 June 2021

பாரதியார்

 

எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்.
எல்லோரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் – நாம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
     

விதுர நீதி

 

அனிர்வேதஷ் ஷ்ரியோமூலம்
லாபஸ்யச ஷுபஸ்யச |
மஹான்பவத் யநிர்விண்ணஹ
ஸுகம் சானந்த்யமஷ்னுதே || 
 
ஊக்கத்துடன் உழைப்பது தான் செல்வம்,
லாபம் சுபம் ஆகியவற்றின் அடிப்படையாகும் 
உழைப்பை விடாதவன் மஹான் ஆகி எல்லையில்லாத 
ஆனந்தநிலை அனுபவிப்பான்

மஹாபாரதம்

 

அனாத்த்யந்தா து ஸா த்ருஷ்ணா
அந்தர் தேஹ கதா ந்ருணாம்
வினாஷயதி ஸம்பூதா
அயோனிஜ இவானலஹ |
   
பொருள்: 
ஆரம்பமும்,முடிவும் இல்லாத தன்னுள்ளேயே 
இருக்க கூடிய பேராசையானது, 
சுயமாக வளர்ந்து அழிக்கக் கூடிய தியைப் 
போன்று மனிதனை அழித்து விடும்

சாணக்ய நீதி சாஸ்திரம்

 

அனாகத விதா தாச
ப்ரத்யுத் பன்ன மதிஸ்ததா
த்வாவைதௌ ஸூகமேதேதே
யத்பவிஷ்யோ வினஷ்யதி
    
பொருள்:
நிகழ் காலத்தில் விழிப்புடனிருப்பவனும், 
எதிர்கலத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் 
கொள்பவனும் வெற்றி பெறுவான். 
நடக்க வேண்டியது தான் நடக்கும் என்பவன் தோல்வியுறுவான்.

சங்க கீதை

 

அனல்பே (அ)ல்பம் விலயதி
நித்யே (அ)நித்யம் ஸ்திரே(அ)ஸ்திரம்
ஸமஷ்டி ஜீவனே தஸ்மாத்
மஜ்ஜயேத் வ்யஷ்டி ஜீவனம்

பொருள்:
சிறிதானது பெரியதுடன் கலந்துவிடும். 
நிரந்தரமில்லாதது நிரந்தரத்துடன் கலந்துவிடும்,
ஆகவே தனிமனித வாழ்க்கையை சமுதாய 
வாழ்க்கையுடன் கலந்து விடவேண்டும்.

விதுர நீதி

 

அர்த்தஸித்தி பராமிச்சன் தர்மமேவாதிதஷ்சரேத்
நஹி தர்மாதபைத்யர்தஹ ஸ்வர்கலோகாதிவாம்ருதம்
    
பொருள்:
 எவனெருவன் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற 
ஆசை கொண்டு இருக்கிறானோ அவன் முதலில் 
தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும். 
ஸ்வர்கத்தை விட்டு அமுதம் பிரிந்து போவது இல்லை. 
அது போல தர்மத்தினின்று 
செல்வம் பிரிந்து போவது இல்லை.

உலகமே குடும்பம்

 

அயம் நிஜஹ் பரோவேத்தி கணனா லகு சேதசாம்
உதார சரிதானாம்து வசுதைவ குடும்பகம்
    
பொருள்:
 இவன் நம்முடையவன்; அவன் வேறு என்கிற 
பேதம் குறுகிய மனம் உள்ளவர்களுக்குத்தான். 
 பரந்த மனப்பான்மை உள்ளவர்க்கு 
உலகமே சொந்தக் குடும்பம்.

எங்கு பேச வேண்டும்

 

அவிசார்ய ந வக்தவ்யம் வக்தவ்யம் ஸூ விசாரிதம்
கிஞ்ச தத்ரைவ வக்தவ்யம் யத்ர உக்தம் ஸ பலம் பவேத் 
பொருள்:
ஆராயாமல் பேசக்கூடாது; நன்கு யோசித்த 
பிறகே பேச வேண்டும். மேலும் எங்கு பேசினால் 
பலன் கிடைக்குமோ அங்கு மட்டுமே பேச வேண்டும்

ஒற்றுமை

 

அபார பூமி விஸ்தாரம்
அகண்ய ஜன சங்குலம் 
ராஷ்ற்றம் சங்கடநாஹீநம்
ப்ரப்வேந்நாத்ம ரக்க்ஷணே||
 பொருள்:
 எல்லையில்லாத பரந்து விரிந்த நிலப்பகுதி, 
எல்லையில்லாத அளவு மக்களின் எண்ணிக்கை 
இருந்தாலும் – ஒற்றுமையாக இல்லையென்றால் 
நாடு தன்னை காத்துக்கொள்ள இயலாது

Sunday, 13 June 2021

போதன்

ஆந்திர மாநிலம், வாரங்கல்லுக்கு அருகில் சிறு கிராமத்தில் பிறந்தவர் போதனா. சிறு வயதிலேயே கவிதை எழுதினார். வீரபத்ர விஜயம் எழுதும்போது அவருக்கு வயது பத்து. ராஜகொண்டா சமஸ்தான அரசர் சிங்கபூபாலர் அவரை ஆஸ்தான கவிஞராக நியமித்துப் பல பரிசுகள் அளித்தார். ஆனால், ராமனைத் தரிசிக்கும் ஆசையில் வெகு சீக்கிரம் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். கோதாவரி தீரத்தில் யோகத்தில் ஆழ்ந்து பரந்தாமனைத் தரிசித்தார். கவி சார்வபௌம ஸ்ரீநாதர் தன் சகோதரியை போதனாவுக்கு மணமுடித்தார். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. நிலத்தில் உழும்போதே இசை பாகவதம் எழுதத் தொடங்கினார். பயிரோடு பாகவதமும் வளர்ந்தது. ஒரு நாள் அமைத்த வார்த்தைகள் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை. மன வருத்தத்தோடு வரப்பில் படுத்து உறங்கி விட்டார். எழுந்து பார்த்தால் அழகாகப் பாடல் எழுந்து பார்த்தால் அழகாகப் பாடல் முடிக்கப்பட்டிருந்தது. பகவான் வந்து பாடலை எழுதியபோது பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார். இந்த விஷயம் மன்னர் செவிக்கு எட்ட, பாகவதத்தை அரசவையில் பாட வரும்படி அழைப்பு விடுத்தார் மன்னர் போதனா, கோவிலியே பாகவதம் அரங்கேறும் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

போதனாவின் தமையனார், ஆதிமூலமே... என்று கஜேந்திரன் அழைத்தவுடன் இரு தேவியருடன் கருட வாகனத்தில் வந்ததாக பாகவதம் சொல்கிறது. நீ உத்தரீயம் நழுவ, கதாயுதமும், சக்கரமும் கொண்டு கிரீடமும் தரிக்காமல் விரைந்து வந்ததாகப் பாடல் புனைந்திருக்கிறாய். புராணத்தை நம் இஷ்டத்துக்கு மாற்றக் கூடாது. திருத்தி எழுதிக் கொண்டு வந்தாலே கோயிலில் அரங்கேற்றலாம் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார். போதனா எதுவும் பேசவில்லை. அன்று சனிக்கிழமை தமையனார் ஒரு சிறு துண்டோடு கிணற்றடியில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார். பெரிய கிணறு. தமையனாரின் ஐந்து வயதுப் பையன் வேத கிரி, அதனருகில் சுற்றிச் சுற்றி வந்து விளையாடிக் கொண்டிருந்தான். கண்களில் எண்ணெய் கட்டிக் கொள்ளும் அந்தக் கால வழக்கப்படி கண்ணை மூடிக் கொண்டிருந்தார் தமையன். போதனா, வேதகிரிக்குத் தின்பண்டங்களும், விளையாட்டுச் சாமான்களும் கொடுத்துத் தூக்கிக் கொண்டு போய் மறைவாக விட்டார்.

கிணற்றில் ஒரு கல்லைப் போட்டார். கிணற்றிலே என்னை விழுந்தது? என்று தமையனார் குரல்கொடுக்க, உள்ளேயிருந்து பெண்கள் ஓடி வந்தனர். வேதகிரி விழுந்து விட்டானண்ணா என்று கவலையோடு போதனா கூற, அவரது தமையனார் பதற்றத்துடன் முகத்தைத் துடைத்துக் கொண்டு கிணற்றில் இறங்க முயன்றார். என்னண்ணா! தண்ணீரெல்லாம் எண்ணெய்யாகும். கைபிடி வழுக்கும், சீக்கிரம் குளித்து உத்தரீயம் தலைப்பாகை, நெற்றியில் திலகம் அணிந்து வாருங்கள் என்று தடுத்தார் போதனா. முட்டாள்! குழந்தை உயிருக்குப் போராடுகையில் அலங்காரமா? என்று சீறினார் தமையன். உங்களுக்கொரு தர்மம்! பகவானுக்கொரு தர்மமா! காலில் உதிரம் சொட்ட நீருக்குள் இழுபடும் கஜேந்திரனைக் காப்பாற்ற பகவான் தேவியரைத் தேடிக் கொண்டு அலங்கரித்துக் கொண்டா வருவார்...? பத்திரமாய் இருக்கிறான். கவலைப்பட வேண்டாம் என்று போதனா, வேதகிரீ என்று குரல் கொடுக்க ஓடி வந்தான் வேதகிரி. போதனா, பாகவதத்தை சங்கீதமாய் கோயிலில் அரங்கேற்ற அரசரும் வந்து, பாராட்டி பரிசுகளை வழங்கினார். இதேபோல் பிரகலாத  சரித்திரம், ருக்மணி கல்யாணம் ஆகியவற்றையும் இயற்றியிருக்கிறார் பக்த போதனா.

Wednesday, 26 May 2021

சாணக்கியர் கூறியது

புத்தகத்தை படிப்பதனால் மட்டுமே வரும் அறிவு, அடுத்தவனிடத்தில் உள்ள செல்வம், ஆகியவை தேவைப்படும் போது நமக்கு பயன்தராது.

சுவாமி விவேகானந்தர் கூறியது

உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்த தைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது.உன்னுடைய ஒவ்வொரு சொல்லும் சிந்தனையும் செயலும், அதற்கு ஏற்ற பலனைத்தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில் வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும் செயல்களும் புலிகளைப் போல் உன் மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப் போலவே உனது நல்ல எண்ணங்களும் செயல்களும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக இருக்கின்றன என்னும் ஊக்கம் தரும் நம்பிக்கையும் இருக்கிறது. இதை நீ எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.