Monday, 16 March 2020

நான் சாதாரண ஸ்வயம்சேவக்

ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக் 

ஒரு சம்பவம் நினைவிற்கு வருகின்றது . ஸ்வயம் சேவகர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது , அறிமுகப் படுத்திக்கொள்ளச் சொன்னேன் . சில ஸ்வயம்சேவகர்கள் ' நான் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக்' என்று சொல்லி அறிமுகம் செய்துகொண்டார்கள் . " சங்க காரியத்தின் எந்த ஒரு பொறுப்பும் இல்லாதவன் நான் " என்று சிலர் சொல்கின்ற கட்டாயம் ஏற்படுகின்றது . எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் இருந்தால் , நமது கட்நாயக் , கணசிக்ஷக் ஆகியவர்கள் நம்மைத் தேடிவந்து விசேஷமான முயற்சி செய்யவேண்டிய அளவிற்கு நாம் நடந்துகொள்வது என்று ஆகும் . அதாவது , நாம் ஷாகாவிற்குச் செல்லாமல் இருந்து , அவர்கள் நமது வீட்டிற்கு வந்து அழைக்கும்படி செய்து . நமது கட்நாயக் , கண சிக்ஷகர்களை தமது வேலையில் விழிப்போடு இருக்கும்படி செய்வது . இதுதான் நமது பொறுப்பு என்பதுபோல தொனிக்கிறது .

பெருமைப்படத்தக்க விஷயம்

           நாம் அனைவருமே " சாதாரண ஸ்வயம்சேவகர்கள் . " அசாதாரணத் தன்மை எதில் உள்ளது ? எனக்கு சங்கத்தில் ஒரு முக்கியமான ஸ்தானம் உள்ளது . ஆங்கிலத்தில் சீஃப் ஆஃப் ஆர் . எஸ் . எஸ் . ( Chief of RSS ) என்கிறார்கள் . என்னிடம் உள்ள அசாதாரணத் தன்மை அல்லது அசாமான்யத் தன்மை எது ? கொஞ்சம் தாடி வளர்ந்துள்ளது . நீங்களும் / தினந்தோறும் முகச்சவரம் செய்யவில்லை என்றால் உங்களுக்கும் வளரும் . அதில் என்ன அசாமான்யத் தன்மை உள்ளது ? இங்கு ஒரு சிலர் அந்தத் திசையில் முயற்சி செய்து வருகின்றனர் . ஆகவே இதில் எந்த விசேஷமும் இல்லை .

எனக்கு ஒரு பழைய சம்பவம் நினைவிற்கு வருகின்றது . அது நமது சங்கத்தை துவக்கியவரைப் பற்றியது . அவர் , தன்னுடன் உள்ள கார்யகர்த் தர்களுக்கு வலியுறுத்திக் கூறினார் : " இந்த சர்சங்கசாலக் வேலை செய்வதற்காக வேறு ஒருவரை தயார் செய்யுங்கள் . அப்பொழுது இந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து " சாதாரண ஸ்வயம்சேவக் " வடிவத்தில் நான் சகஜமாக வேலை செய்ய முடியும் . சாதாரண ஸ்வயம்சேவக் எப்படி இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் எனக்குச் சில கருத்துக்களும் , ஆசையும் , எதிர்பார்ப்புகளும் இருக கின்றன . அதன் படி , சுயமாக நடந்துகாட்டி , உடன் வேலை செய்பவருக்காக ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த முடியும் . ' ' அதாவது , அவருக்கு சாதாரண ஸ்வயம்சேவகனாக இருக்கவே ஆசை . சூழ்நிலை அவரை அவ்வாறு இருக்க விடவில்லை , ஆகவே , சங்கத்தின் தலைவர் என்கின்ற முறையில் அவர் வேலை செய்ய வேண்டியதாயிற்று . அவர் மனதில் இப்படிப்பட்ட ஆசை ஏன் வந்தது ? இவ்வாறு ஏன் எதிர்பார்ப்பு இருந்தது ? அதற்கு ஒரே காரணம் , நமது  இயக்கத்தில் “ சாதாரண ஸ்வயம்சேவக் " ஆவது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்பதுதான் .

     

No comments:

Post a Comment