Monday, 16 March 2020

தன்னையே நம்புபவன் உத்தமன்

கதிர்கள் விளைந்திருந்தது.

அதில் ஒரு பறவை தன் குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது.

அறுவடைக்கு நாள் நெருங்கிற்று.

வயலின் உரிமையாளர் அதனைப் பார்த்து தன் மகன்களிடம் சொன்னார்.

" பக்கத்து ஊர் பரமசிவன்கிட்ட அறுவடை செய்யச் சொல்லனும் !"

இதனைக் கேட்ட குஞ்சுப்பறவைகள் தங்கள் தாயிடம் சொல்லி , " அம்மா, அறுவடைக்கு ஆட்கள் வந்தால் நாம் எங்கே போவது..?"

பயப்படாதீர்கள். யாரும் வரமாட்டார்கள்  என்றது தாய்ப்பறவை.

பரமசிவன் மறுநாள் அறுவடைக்கு வராதது கண்டு வயலின் உரிமையாளர் தன் மகன்களிடம் ,

" பரமசிவன் வரல .அவன் தெரிஞ்சவன் . அதனால அவனுக்கு அக்கறை இல்லை.

நமது சொந்தக்காரன் சுப்பையாவிடம் சொல்வோம் " என்றார்.

இதனையும் குஞ்சுகள் சொல்ல கவலைப்படாதீர்கள் என்றது தாய்ப்பறவை.

சுப்பையாவும் அடுத்தநாள் வரவில்லை.  வயல் உரிமையாளர் , 
" அடுத்தவன்களை நம்பி பயன் இல்லை. அதனால் நாமே நாளை நம் குடும்பத்துடன் வந்து அறுவடை செய்வோம் !" என்று தன் மகன்களிடம் கூறினார்.

இதனை குஞ்சுகள் தங்கள் தாயிடம் கூறின.

உடனே தாய்ப்பறவை,

"மற்றவர்களைச் சாராது இவர்களே வர முடிவு செய்து விட்டதால் நாளை கண்டிப்பாக வந்து விடுவார்கள். அதனால் நாம் இன்றே வேறு இடத்திற்கு செல்வோம். கவலை வேண்டாம் !" என்றது.
.
தன் காரியத்திற்கு

அடுத்தவரை நம்புபவன் அதமன்.

உறவினரை நம்புபவன் மத்திமன்.

தன்னையே நம்புபவன் உத்தமன்.  

வள்ளுவர், விவேகானந்தர் சொன்னது போல விடாமுயற்ச்சியுடன் தொடர்ந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment