ஒவ்வொரு வீடும் ஒளிமயமாகிட
தீபமாலையாய் ஆகிடுவோம்
மெளன தவசியாய் சாதகனாகி
இமயப் பனிபோல் உருகிடுவோம்
புத்தெழுச்சியின் கீதமாகியே
புதிய திருப்பம் தந்திடுவோம்
துணிவும் தீரமும் நெஞ்சினில் தாங்கி
புதிய சக்தியின் சிகரம் காண்போம்
சங்க சக்தியின் முழக்கம் கேட்டே,
அசுர சக்திகள் அழிந்தொழியும். (மெளன)
பிறர் நலம் பேணும் லட்சியத்துடனே
பிறர் துயர் துடைத்தே வாழ்ந்திடுவோம்
தூய்மையும் உறுதியும் மனதில் நிறைந்தே
அன்பு பொழிந்தே வாழ்ந்திடுவோம்.
நிராசை இருளும் சூழ்ந்த கடலிலே
படகாய் வந்தே காத்திடுவோம் (மெளன)
பக்தி உணர்வே மக்களின் சக்தி
வழிவழியாய் வரும் செல்வமிது
பாரதத் தாயின் பாத மலர்களை
பாடிப் புகழ்ந்தே வணங்கிடுவோம்
மக்கள் வாழ்வில் இரண்டற இணைந்தே
சங்க உணர்வை வளர்த்திடுவோம். (மெளன)
No comments:
Post a Comment