Saturday, 25 July 2020

மனிதா நீ மகத்தானவன்


மனிதா நீ மகத்தானவன் - மண்ணில்
பரம்பொருளின் உருவானவன்
பாரதத்தாய் இளையமகன்
பண்பாட்டில் மூத்த மகன்
வரலாற்றை உருவாக்கும் தலைமகன் நீ 
(மனிதா நீ)

மனம் வைத்தால் மலைகளும் உன்
கைகளுக்குள் தூளாகும் 
கணப் பொழுதில் நதிகளுமே
திசைமாறிப் பாய்ந்து வரும்
மனம் வைத்தால் மண்ணிதனில்
அம்ரு தமும் திரண்டுவரும்
வானமிங்கு பூமி யுடன்
விளையாட்டாய் ஒன்றிணையும்
அழிவற்றவன் நீ....அழிவற்றவன் நீ
உந்தன் உயிரினிலே நின்றுலவும்
பரம்பொருளின் மகத்துவத்தை உணர்ந்திடுவாயே
(மனிதா நீ)

கண்களிலே கனலிருக்கும் 
அசைவினிலே புயலிருக்கும்
பொங்கிவரும் சினங் கண்டு
காலனிங்கு ஓடிவிடும்
மண்ணும் செந் நிறமாகும்
மாமலையும் தாழ்ந்துவிடும்
சீற்றத்தின் உச்சியிலே
தாண்டவம் நடம் புரியும் 
உண்மையிலே நீ...உண்மையிலே நீ
பெரும் சக்திகளின் முழுஉரு நீ
குரல் கொடுத்து புதுயுகத்தை அழைத்திடுவாயே
(மனிதா நீ)

அண்டத்தில் வீரமகன் 
அக்னியைப் போல் பெருந்தீரன்
கட்டளைக்கு அடிபணிந்து 
காலம்கூட நின்று விடும்
உறுதி கொண்டு உழைத்தாலே
சாதிப்பாய் எதையும் நீ
துணிவு கொண்ட உள்ளத்துடன்
சிங்கமென எழுவாய் நீ
முயன்றாலே நீ...முயன்றாலே நீ
உந்தன் முயற்சியெனும் பெரும் பலத்தால்
மண்ணுலகை விண்ணுலகாய் மாற்றிடுவாயே
(மனிதா நீ

No comments:

Post a Comment