பாரத நாட்டுப் படையில் வீரத்தைக் காட்டியதற்காக மகாவீர் சக்ர, பரம்வீர் சக்ர விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்திய அரசு முதன் முறையாக ராணுவத்தில் இல்லாத ஆர்எஸ்எஸ் ஊழியர் ஸ்ரீ பூஜாரி மாணிக்கத்திற்கு அவரது மறைவுக்குப்பின் கீர்த்தி சக்ரா விருது வழங்கியுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலம் வாரங்கல் ஜில்லாவில் திம்மபேட் கிராமத்தில் அந்த நிகழ்ச்சி நடந்தது. அது ஒரு நக்சலைட்டுகளின் பகுதி ஆகும். பத்து கிராமங்களில் ஜனசக்தி என்ற ஒரு நக்சலைட் குழு, கிராமவாசிகளிடம் இருபத்தைந்து லட்ச ரூபாய் திரட்டும் படி கூறியது. கிராமவாசிகள் மறுக்கவே ஆறு லட்சம் என்று குறைத்துக் கொண்டனர். ஆனால் மாணிக்கத்தின் தலைமையில் கூடிய கிராமவாசிகள் இந்த தொகையையும் கொடுக்க மறுத்தனர்.
இந்த நிகழ்ச்சியால் கொதிப்படைந்த மூன்று நக்சலைட்டுகள் கிராமத்தின் மீது தாக்குதல் என்று அறிவித்தனர். மாணிக்கம் மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஆதிநாராயணனை பிடித்து சென்று விட்டனர். சற்று தூரம் சென்றதும் கம்பாலும், கோடாரியாலும் அடிக்கத் தொடங்கினர். கோடாரியால் தாக்கப்பட்டு ஆதிநாராயணன் இறந்தார். ஆனால் சங்க ஷாகாவில் சிலம்பம் பயின்றிருந்த மாணிக்கம் ஒரு எதிரியிடமிருந்து சிலம்பத்தை பிடுங்கி, மூன்று எதிரிகளையும் தாக்கி வீழ்த்தினார். தங்கள் கூட்டாளிகள் மூவர் இறந்ததனால் வெகுண்ட நக்சலைட்டுகள் நான்கு புறமும் மாணிக்கத்தை சூழ்ந்துகொண்டு காட்டுமிராண்டித்தனமாக அவரைக் கொலை செய்தனர்
No comments:
Post a Comment