Tuesday, 13 July 2021

தெய்வம்

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே
  --- நம்மாழ்வார் திருவாய்மொழி
 பொருள்:
 அவரவர் தமது தமது அறிவுகளுக்குத் தோன்றிய 
வகைப்படியே அந்தந்த தெய்வ வடிவங்களை 
இறையவர் என அடிபணிவார்கள்; அவரவர் 
தெய்வங்கள் குறையுடையவரே அல்லர்; 
ஓர் இறைவரே அவரவருடைய விதிப்படியே 
அடையும் படி நின்று அருள் புரிகிறார்

 


No comments:

Post a Comment