Wednesday, 2 October 2019

புது யுகத்தை நிறுவ எங்கும்

புது யுகத்தை நிறுவ எங்கும்
புத்துணர் வெழுப்புவோம்

அடிமை வாழ் வொழிந்ததன்று
அன்னியன் அகன்றனன்
அன்னையைப் பிணைத்து வைத்த
சங்கிலி அறுந்தது
அன்னியரை நம்பி வாழும்
அவல் நிலை மாற்றுவோம்
                                         (புது)

விண்ணளாவ பாரதியின்
ஆலயம் அமைத்திட
வானவர் தம் நாடு போல
பாரதத்தை ஆக்கிட
தேசபக்தி தீச்சுடரை
உள்ளம் தோறும் ஏற்றுவோம்
                                  (புது)

பாதையிலே பாதகர்கள்
நிற்பதை உணர்ந்துள்ளோம்
வீரமைந்தர் குடிப்பிறந்தோர்
திமைகண்டு தளர்வரோ
உளந்தனிலே வலிமை யுண்டு
உணர்வினிலே திரளுவோம்
                                      (புது)

கண்துஞ்சாக் காவலராய்க்
காத்திடுவோம் நாட்டினை
பிளவு நஞ்சு பரவும் நாட்டில்
ஒருமை அமுதம் பாய்ச்சுவோம்
நாட்டுக்காக வாழவீழத்
தியாக உணர் வூட்டுவோம்
                                       (புது)

No comments:

Post a Comment