பாரதத்தாயை பணிந்து வணங்கும்
வீர மைந்தர் நாம்
அர்ப்பணமாவோம் அவள் தாளினிலே
தூய மலர்கள் நாம்
பேசுகிறோம் நாம் பல மொழி ஆனால்
பேதம் இங்கில்லை
வங்கள மொழியும் இன்பத்தமிழும்
எங்களதென்றிடுவோம்
கவின் மலையாளம் கன்னடம் தெலுங்கு
இந்தியும் எங்களதே
குமரி முனையிலே தவம் செய் சக்தி
இமயம் உறை ஈசன்
ராமேஸ்வரமும் காசியும் அதனை
வழிபடு பக்தர்களும்
நர்மதை கங்கை காவிரி நதியும்
ஒருமை உணர்த்திடுது
ஆயிரம் சாதிகள் நம்மில் உண்டு
ஆயின் நாம் ஒன்று
மாநிலம் பலவாய்ப் பிரிந்திருந்தாலும்
மக்கள் நாம் ஒன்று
வழிபடு தெய்வம் பலவானாலும்
அனைவருமே ஹிந்து
தொழில் செய்தாலும் கல்வி கற்றாலும்
தேசத்தின் நன்மைக்கே
நாட்டின் உடைமையை நாமே அழித்தால்
நஷ்டம் யாருக்கு
செய் தொழிலினிலே வேறுபட்டாலும்
யாதும் அவள் தொழிலாம்
No comments:
Post a Comment